கடுவன பிரதேச செயலாளர் அலுவலகத்தை அண்மித்து அமைந்துள்ள கடுவன கோட்டை ஒல்லாந்தரின் ஆக்கமாகும். இது ஆக்கமாக இருந்தாலும் பொலன்னறுவை காலத்தில் முதலாவது விஜயபாகு அரசன் தனக்கு பாதுகாப்பான இடமாக இந்த இடம் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஊருபொக்க ஒயாவும் ரத்மலே எனும் மலையும் இயற்கையான பாதுபாப்பு உள்ள இடமான இந்த இடத்தை ஒல்லாந்தர் தமது கோட்டையை கட்டுவதற்கு ஏற்ற இடமென தேர்ந்தெடுத்துள்ளார்கள். கண்டி சிங்கள ராஜ்யத்தின் தலை நகரத்திலிருந்து மாத்தறை வரையிலான பாதையை பாதுகாப்பதற்கும் வியாபார தொடர்புகள் பாதுகாத்துகொள்வதற்கும் இந்தக் கோட்டையை கட்டியதாக மதிக்கப்படுகின்றது. இந்த கோட்டையின் உயரம் 16 சப்பாத்துகளும் அகலம் 11 சப்பாத்துகளும் உள்ளதோடு மேலுக்கு இரண்டு தட்டுகள் இருந்திருக்கின்றது. கடுவன கோட்டைக்கு பல தடவை சிங்களவரின் தாக்குதல்கள் நடந்ததென புரோஹியரின் அறிக்கையில் குறிப்பிடுகின்றது. 1761 பெப்ருவரி 08 ம் திகதி சிங்களப் படையினர் ஒல்லாந்தரின் கோட்டையைக் கைப்பற்றினார்கள்.